ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை

67பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு நகரம், ஆரணி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெய வீர விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் நான்காம் ஆண்டு துவக்க விழா இன்றைய தினம் சனிக்கிழமையை முன்னிட்டு அனுமான் அமர்ந்த சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதற்கு முன்னதாக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயருக்கு விளக்கேற்றி வழிபட்டனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you