உடுமலை வழியாக ராமேஸ்வரம் ரயில் மீண்டும் இயக்கப்படுமா!

667பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை வழியாக கோவை ராமேஸ்வரம் தினசரி விரைவு ரயில் மீண்டும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை கண்டு கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பயணிகள் வேதனை அடைந்துள்ளனர். திண்டுக்கல் பாலக்காடு அகல ரயில் பாதை மின் மயமாக்கப்பட்ட பிறகு கூடுதல் ரயில் சேவை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அனைத்து மக்களும் இருந்தனர் ஆனால் மாறாக நீண்டகாலமாக பயணிகள் வலியுறுத்தும் ரயில் கூட இயக்கப்படாமல் உள்ளது குறிப்பாக ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை மீண்டும் செயல்படுத்த உடுமலை சுற்று பகுதி பயணிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :