நகராட்சி வழங்கும் குடிநீரில் புழுக்கள் -மக்கள் குற்றச்சாட்டு

83பார்த்தது
காங்கேயம் நகராட்சிக்கு உட்பட்ட தாராபுரம் சாலை (பழைய 11 வார்டு) புதிய 16வது வார்டு காந்திபுரம் பகுதியில் அமராவதி கூட்டுக் குடிநீர் நீர் மற்றும் காவிரி கூட்டுக் குடிநீர் மூலம் நகராட்சி நிர்வாகம் வீடுகளுக்கு குடிநீர் வழங்கி வருகின்றது. மேலும் இந்த குடிநீர் குழாய்கள் செல்லும் பாதைகளில் சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் குடிநீர் குழாய்களுக்குள் சாக்கடை நீர் கலந்து செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது . மேலும் வழங்கப்படும் குடிநீரில் குப்பைகள், தூசுகள் கலந்து வருவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் இந்த பகுதியில் குடியிருந்து வரும் முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை உடல்நிலை சீர்கேடு ஏற்படுவதாகும் தெரிவிக்கின்றனர். பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை எனில் நகராட்சி நிர்வாகத்தை முற்றுகையிட போவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you