வயல்வெளிகளில் மது பாட்டில்கள்? பொதுமக்கள் வேண்டுகோள்

67பார்த்தது
வயல்வெளிகளில் மது பாட்டில்கள்? பொதுமக்கள் வேண்டுகோள்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் காரத்தொழுவு கிராமம் அமராவதி ஆற்றங்கரை பொன்னழகுநாச்சியம்மன் கோவில் செல்லும் வழியில், விவசாய நிலங்களில் மதுப்பிரியர்கள் மது குடித்து விட்டு வயல்வெளியில் பாட்டில்களை போட்டு விட்டு செல்கின்றனர். கோடை காலம் முடிந்த நிலையில் , தற்போது அடுத்த போகம் நெல் பயிரிடும் காலம் என்பதால் வயல்களை சீரமைக்கும் பணிகள் துவங்கி விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். மது பாட்டில்களை வயல்களில் வீசி செல்வதால் சில சமயங்களில் பாட்டில்கள் உடைந்து மண்ணில் புதைந்து விடுகின்றன. இதன் காரணமாக வெறும் கால்களில் விவசாய வேலை செய்யும் விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. ஆகவே மதுப்பிரியர்கள் இதுபோன்ற இடங்களில் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you