திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள மூலனூர் சின்னக்கம்பட்டி பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக ஈக்களின் தொல்லை காரணமாக தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோழிப் பண்ணைகளில் இருந்து வெளியே வரும் கழிவுகளால் ஈக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. என தெரிவித்துள்ளனர் மேலும் இத்தொல்லையால் சாப்பிட முடியாமல் தூங்க முடியாமலும் மிகவும் சிரமப்பட்டு வருவதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர் எனவே சுகாதாரத் துறை அமைதியை அருகில் சுகாதாரமற்ற கிடைக்கும் கோழிப்பண்ணையை ஆய்வு செய்து பண்ணை நடத்தும் உரிமையாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் அப்பகுதியில் உள்ள கோழிப்பண்ணையை அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.