கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் சனநாயக பேரவை முற்றுகை

68பார்த்தது
தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை ஆதி தமிழர் சனநாயக பேரவை சார்பில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுடன் முற்றுகையிட்டு ஆதித்தமிழர் சனநாயக பேரவையின் நிறுவனத் தலைவர் பவுத்தன் தலைமையில் மனு அளித்துள்ளனர்.

இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, காங்கேயம் வட்டத்திற்குட்பட்ட குண்டடம் ஊராட்சி ஒன்றியம், காடையூர் மற்றும் வட சிண்ணாரி பாளையம் ஆகிய இரண்டு கிராமங்களில் உள்ள வீனம்பாளையம், கல்லாங்காட்டுப்புதூர், பொன்னங்காளி வலசு பகுதிகளைச் சேர்ந்த பட்டியலின பொதுமக்களின் பலகட்ட போராட்டத்திற்கு பிறகு 1994 ஆம் ஆண்டு ஈரோடு நில சீர்திருத்த உதவி உதவி ஆணையர் உத்தரவுப்படி காடையூர் மற்றும் வடசென்னரி பாளையத்தில் 51 பேருக்கு உபரி நிலம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த நிலத்தில் மக்கள் விவசாயம் செய்ய உடனடியாக நிலத்தை அளவீடு செய்து பட்டா நகல் வழங்கக் கேட்டுக் கொள்கிறோம். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப் போவதாக தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் மாவட்ட நிர்வாகி கார்த்திக், அம்பேத்கர் மக்கள் இயக்கம் மாவட்ட செயலாளர் தேவராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி