திருச்சியில் துரை வைகோவை காணோம் - விஜயபாஸ்கர் அதிரடி

4453பார்த்தது
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கருப்பையா தன் சொந்த ஊரான
புதுக்கோட்டை கறம்பக்குடி அடுத்துள்ள குழந்திரான்பட்டு அரசு உயர்நிலைபள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

இதைத் தொடர்ந்து வேட்பாளர் கருப்பையா திருச்சி உள்ள புனித சிலுவை கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவை பார்வையிட்டார்.

தொடர்ந்து பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்,

பொதுச் செயலாளர் வேண்டுகோளுக்கிணங்க திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் ஒற்றை விரலால் வாக்காளர்கள் ஓங்கி அடித்துள்ளனர். வேட்பாளர் கருப்பையா புதுக்கோட்டையில் வாக்களித்து விட்டு திருச்சி பகுதி முழுவதையும் சுற்றி பார்த்து வருகிறார். வேட்பாளர் கருப்பையா இங்கே, துரை வைகோ எங்கே. அவர் சென்னையில் வாக்களித்தார் அல்லது விருதுநகர் கலிங்கம்பட்டியில் வாக்களித்தார் என எந்த தொலைக்காட்சியிலும் பார்க்கவில்லை.

இதே நிலைமைதான் ஏற்படும் என்பதை உணர்ந்து தான் மண்ணை சார்ந்த உங்களோடு இணைக்க எவ்வளவு தான் அவர்கள் ரீசார்ஜ் செய்தாலும் அவங்க அவுட் ஆப் ரிச்சுக்கு சென்று விடுவார்கள். தொடர்பு எல்லைக்குள் எப்போதும் இருக்கக்கூடிய கருப்பையா அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது சர்ப்ரைஸ் கிப்ட் யாரும் எதிர்பாராத வெற்றி என்ற கிப்ட்டை நாங்கள் பொதுச் செயலாளருக்கு ஒப்படைப்போம் என்றார்.