அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை உயர்வு: மேயர் பேச்சு!

64பார்த்தது
அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை உயர்வு: மேயர் பேச்சு!
தூத்துக்குடியில் புதிய கல்வி ஆண்டிற்காக  பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளியின் குழந்தைகளுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி புத்தகங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கினார்.


நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியில் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையானது உயர்ந்து வருகின்றது. அதனை கருத்தில் கொண்டு நடைபெற்ற முடிந்த புதிய பள்ளி வகுப்பறை கட்டிடங்களையும் செப்பனிடப்பட்டு வரும் பழைய பள்ளி கட்டிடப் பணிகளையும் அந்தப் பள்ளியில் நடைபெற்று வரும் புதிய மாணவர் சேர்க்கையினையும் பார்வையிட்டேன் என்றார்.  


திமுக பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, தலைமை ஆசிரியர் எமல்டா வெலன்சியா, மாமன்ற உறுப்பினர்கள் பாப்பாத்தி அம்மாள், முத்துமாரி, வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான பாலன், முன்னாள் மாமன்ற உறுப்பினரும் முன்னாள் வட்ட கழக செயலாளருமான இசக்கிமுத்து, முன்னாள் மாநகர விவசாய அணி அமைப்பாளர் ஆவுடையப்பன், ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மாணவச் செல்வங்கள்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி