தேசிய மாணவர் படை சார்பில் மாணவ மாணவியர் யோகாசனம்

59பார்த்தது
தூத்துக்குடி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் முத்துநகர் கடற்கரையில் தேசிய மாணவர் படை சார்பில் சுமார் 350 க்கு மேற்பட்ட மாணவ மாணவியர் யோகா சனம் செய்தனர்

இன்று சர்வதேச யோகாசன தினம் கொண்டாடப்படுகிறது இதையொட்டி பல்வேறு யோகாசன நிகழ்ச்சிகள் தூத்துக்குடியில் நடைபெற்றன தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பகுதியில் வைத்து தேசிய மாணவர் படை அமைப்பின் தூத்துக்குடி கிளை சார்பில் லெப்டினன் கர்னல் பிரதேஷ் தலைமையில் யோகாசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது


இந்த யோகாசனம் செய்யும் நிகழ்ச்சியில் கடற் படை, தரைப்படை பிரிவுகளைச் சேர்ந்த தேசிய மாணவர் படை மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சூரிய நமஸ்காரம், வஜ்ராசனம், மகராசனம், பத்மாசனம், பக்ஷி மோத்தாசனம், சாவாசனம், பிராணயாம பயிற்சிகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட யோகாசனங்களை செய்து காண்பித்தனர் இந்த யோகாசனம் தங்களுக்கு உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் என இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you