குரு பகவான் கோவிலில் மாவட்ட எஸ் பி ஆய்வு

77பார்த்தது
குரு பகவான் கோவிலில் மாவட்ட எஸ் பி ஆய்வு
ஆலங்குடி குருபகவான் கோவில் கும்பாபிஷேக-பாதுகாப்பு முன்னேற்பாடுகளை நேரில் ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் உட்கோட்டம், வலங்கைமான் காவல் சரகம், ஆலங்குடி, அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் (குருபகவான்) திருக்கோவில் கும்பாபிஷேக விழா (12. 07. 2024) நடைபெறவுள்ளது.

🚨கும்பாபிஷேக விழாவில் அதிக அளவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள கூடும் என்பதால், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அங்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் M. Sc, (Agri). , அவர்கள் இன்று (09. 07. 2024) நேரில் சென்று ஆய்வு செய்தார்கள்.

மேலும், போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையிலும், பக்தர்கள் எளிதில் சாமி தரிசனம் செய்யும் வகையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்வது குறித்தும், வாகன நிறுத்தும் இடங்கள் அமைப்பது குறித்தும் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்கள்.

அப்போது, துணை காவல் கண்காணிப்பாளர் திரு. K. பாஸ்கரன் அவர்கள் மற்றும் வலங்கைமான் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் உடனிருந்தார்கள்
Job Suitcase

Jobs near you