மீனவர்கள் மீன் பிடி வலைகள் எரிப்பு போலீசார் விசாரணை

61பார்த்தது
பழவேற்காட்டில் மீன்பிடிக்க கடலுக்கு சென்று விட்டு வைக்கப்பட்டிருந்த நான்கு லட்ச ரூபாய் மதிப்பிலான மீன்பிடிவலைகள்
தீயில் கருகி நாசம் திருப்பாலைவனம் காவல்துறையினர் விசாரணை.


திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த பசியாவரம் மீனவ கிராமத்தில் வசிக்கும்குமார்
சிவகுமார், , சேகர், சாய்குமார் ஆகியோருக்கு சொந்தமான மீன்பிடி வலைகளை கடலுக்கு மீன்பிடிக்க சென்று விட்டு படகுகளை நிறுத்தும் கரை ஓரத்தில் வழக்கமாக வைக்கும் இடத்தில் வைத்துள்ளனர்.
வலைகள் திடீரென தீப்பிடித்து இருந்ததை கண்ட அப்பகுதி மீனவ மக்கள் உடனடியாக
எரிந்து கொண்டிருந்த வலைகளை அருகில் இருந்த தண்ணீரை எடுத்து ஊற்றி அணைத்து உள்ளனர். இதற்குள் நான்கு லட்ச ரூபாய் மதிப்பிலான மீன்பிடிவலைகள் தீயில் எரிந்து சாம்பல் ஆனது. இதுகுறித்து மீனவர்கள் திருப்பாலைவனம் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீன்பிடி வலைகள் எரிந்ததால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி