மனைவியை கொன்று புதைத்த கணவர்? - போலீஸ் விசாரணை

9807பார்த்தது
மனைவியை கொன்று புதைத்த கணவர்? - போலீஸ் விசாரணை
கடலூர் வேப்பூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் - சுவேதா தம்பதி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ஹிட்டாச்சி ஓட்டுநரான சக்திவேல், தான் வேலைக்கு செல்கிற இடங்களுக்கு எல்லாம் தனது மனைவியை உடன் அழைத்துச் சென்று அங்கேயே தங்கி விடுவார். அதேபோல், சின்னசேலத்தில் தங்கிய நிலையில் நேற்று (ஜூன் 09) மாலை தனது மனைவியை கொன்று புதைத்துவிட்டு சக்திவேலும் தற்கொலை செய்துகொண்டார். குழந்தை இல்லாத காரணத்தால் தகராறு நடந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இது கொலையா? அல்லது தற்கொலையா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி