இந்திய தேர்தல் ஆணையர் நாளை தமிழகம் வருகை

79பார்த்தது
இந்திய தேர்தல் ஆணையர் நாளை தமிழகம் வருகை
நாடாளுமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையரான ராஜீவ்குமார், 2 நாள் பயணமாக நாளை சென்னை வருகை தருகிறார். தொடர்ந்து, நாளை அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆலோசனை நடத்த உள்ளார். நாளை பிற்பகல், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் துறையினருடன் ஆலோசனை நடத்துகிறார்.