ஸ்ரீதர்வேம்புதந்தை படத்திற்கு அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை

59பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா,
சோஹோ நிறுவனத்தின் தலைவர் ஶ்ரீதர் வேம்புவின் தந்தை வேம்புஅய்யர் கடந்த 22ந் தேதி வயது மூப்பு காரணமாக இறந்தார். இவருடைய மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திருப்பனந்தாள் அருகே உள்ள தத்துவாஞ்சேரி பகுதியில் உள்ள ஶ்ரீதர் வேம்பு வீட்டுக்கு நேரில் வந்தார். முன்னதாக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த அவர் சாலை மார்க்கமாக தத்துவாஞ்சேரி வந்தார். ஶ்ரீதர் வேம்பு வீட்டிற்கு முன்பு அமைக்க பட்டிருந்த அலங்கார மேடையில் இருந்த வேம்பு அய்யர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தபின், ஶ்ரீதர் வேம்பு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்ட அவர் விக்கிரவாண்டிக்கு சென்றார். இந்த நிகழ்வில் இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத், பொதுச்செயலாளர் குருமூர்த்தி, பாஜக மாவட்ட தலைவர் சதீஷ் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you