தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவின் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப், தேர்தல் காவல் பார்வையாளர் மரு எஸ். டி. சரணப்பா ஆகியோர் வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
அப்போது ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவின் செயல்பாடுகள் குறித்தும், பறக்கும் படையினர் வாகனங்களில் பொருத்தப்பட்ட ஜி. பி. எஸ் கருவிகளின் கண்காணிப்பு செயல்பாடுகள் குறித்தும், பார்வையிட்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.