காதலனுக்கு திருமண ஏற்பாடு.. விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

51பார்த்தது
காதலனுக்கு திருமண ஏற்பாடு.. விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை
தஞ்சாவூர் மாவட்டம்,  
பேராவூரணி அருகே, காதலனுக்கு திருமணம் செய்ய வேறு பெண் பார்த்ததால் மனமுடைந்த காதலி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.   
பேராவூரணி அருகே உள்ள ஊமத்தநாடு கிராமத்தை சேர்ந்தவர் செல்லமுத்து மகள் வத்சலா (28). இவர் கடந்த 14 ஆண்டுகளாக அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பிய நிலையில், அந்த இளைஞருக்கு வேறு பெண்ணை திருமணம் செய்ய அவரது குடும்பத்தினர் பெண் பார்த்ததாக கூறப்படுகிறது.  
இதனால் மனமுடைந்த வத்சலா வயலுக்கு அடிப்பதற்காக வீட்டில் வாங்கி வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை கடந்த 7 ஆம் தேதி குடித்தார். இதையடுத்து ஆபத்தான நிலையில், புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இறந்தார்.  
இதுகுறித்து அவரது தாயார் சரோஜா பேராவூரணி காவல் நிலையத்தில் புகார் செய்ததன் பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.