மதுக்கூர் கடைத்தெரு பகுதியில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு

81பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் கடை தெருவில் புதிய டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மதுக்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியான பழைய அம்மா சந்தை, மருத்துவமனை, காவல் நிலையம், காவலர்கள் குடியிருப்பு பகுதி, பள்ளிக்கூடம் என மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய மிக முக்கிய பகுதியான மதுக்கூர் - பட்டுக்கோட்டை மெயின் ரோட்டில் புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது. இந்த தகவலை அறிந்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அப்பகுதி மக்களை ஒன்று திரட்டி மதுக்கூர் கடைத் தெரு பகுதிக்குள் டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது. இப்பகுதியில் டாஸ்மாக் கடை திறந்தால் குடியிருப்பு மக்களுக்கும் பள்ளிக்கூடங்கள் அனைத்திற்கும் மிகப்பெரிய சிரமங்களாக இருக்கும். அவ்வாறு திறந்தால் அந்தக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என்றும் மதுக்கூர் காவல் நிலையத்தில் பொதுமக்கள் சார்பில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பவாஸ், செயலர் ஜெகபர் அலி, மாவட்ட துணை செயலர் இலியாஸ் மற்றும் பலர் மனு கொடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி