கோயில் திருவிழா நடத்த எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்

58பார்த்தது
கோயில் திருவிழா நடத்த எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்
தஞ்சை மாவட்டம், திருவோணம் தாலுகா இடையன்காடு கிராமத்தில் அய்யனார் கோயில் உள்ளது.
இக்கோவிலின் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவோணம் தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியர் முருகவேல் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மேலும் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் உத்தரவு வந்த பிறகு திருவிழா நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது இந்நிலையில் நேற்று காலை ஒரு தரப்பினர் கோவில் திருவிழாவில் நடத்தினர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து இடையன்காடு கிராமத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருவோணம் வட்டாட்சியர் முருகவேல், வாட்டாத்திகோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதை அடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.