தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. இந்த மழையால் திருக்கருக்காவூர், கரும்பத்தூர், கோவிந்தநல்லூர், சோலைபூஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோடைப்பருவத்தில் பயிர் செய்திருந்த நெற்பயிர்கள் மழை நீரில் சாய்ந்து பாதிப்புக்கு உள்ளானது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும், அவர்கள் ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.