மாணவ மாணவிகளுக்கு தென்காசி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

3685பார்த்தது
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச் சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;- 

தென்காசி மாவட்டத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும். அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் கவிதை கட்டுரை பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெற்று பரிசுகள் (ம) பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கப்பெற உள்ளது.

11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும். 09. 01. 2024 அன்றும், கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் 10. 01. 2024 அன்றும் காலை 10. 00 மணிக்கு தென்காசி இ சிஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பெற உள்ளது.

 இந்தப் போட்டிகளில் அனைத்து மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளும் அனைத்து கல்லூரி மாணவ மாணவிகளும் கலந்து கொள்ளலாம்.

ஒரு பள்ளியிலிருந்து ஒரு போட்டிக்கு ஒருமாணவர் வீதம் மூன்று போட்டிகளுக்கு 03 மாணவர்கள் கலந்து கொள்ளலாம். போட்டிகளுக் கான தலைப்புகள் போட்டிகள் தொடங்கும் முன்பு நடுவர்கள் முன்னிலையில் அறிவிக்கப் பெறும் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தங்கள் பள்ளி தலைமையாசி ரியரின் பரிந்துரையுடன் உரிய படிவத்தினை நிறைவு செய்து இப்போட்டி நடைபெறும் நாளில் அரிக்கப்பெற வேண்டும்.

கல்லூரியிலிருந்து ஒரு போட்டிக்கு இரண்டு மாணவர்கள் வீதம் மூன்று போட்டிகளுக்கு 06 மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி