தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் மாநில அளவிலான ஸ்கேடிங் சாம்பியன் போட்டி நேற்று நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்து 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கு பெற்றனர்.
இதில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் வெஸ்டர்ன் கார்ட்ஸ் இந்தியன் அகாடமி சார்பில் 15 மாணவர்கள் பங்கேற்று 100மீ, 200மீ, 300மீ, 400 மீட்டர்; பிரிவுகளில் வெற்றி பெற்றனர்.
இதில் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பியான கிஷோர் கவிஷ் 2 தங்கப்பதக்கம், கிஷாந்த் கவிஷ் 1 தங்கம் 1. வெள்ளி பதக்கமும் வென்று சாதனை படைத்தனர்.
மேலும் மாணவர்கள் துஷாந்த், சிவ
விஜய், சண்முக விக்னேஷ், சாய் அஸ்வின், குரு பிரசாத் ஆகியோர் ஒரு தங்கப்பதக் கமும், கவிஷ், சுர்ஜித், சல்மான் காஜா ஆகியோர் வெள்ளி பதக்கமும்,
தன்வந்தேஷ், தருண், செல்வமித்ரன், பூவரசன், ரகு வசந்த் ஆகியோர் வெண்கல பதக்கமும் வென்றனர்.
சாதனை படைத்த மாணவர் களை பயிற்சியாளர்கள்
மாஸ்டர் கணேஷ், ராம்ராஜ், வெஸ்டர்ன் கார்ட்ஸ் இந்தியன் அகாடமி கலைமதி கணேஷ் ஆகியோர் பாராட்டினர்.