வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த ஜான் பாண்டியன்

2973பார்த்தது
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் நேற்று பாஜக வேட்பாளரான ஜான் பாண்டியன் மேளதாளம் முழங்க 500க்கும் மேற்பட்ட கூட்டணி கட்சி தொண்டர் களுடன், பிஜேபி கொடி கட்டிய காரில் வலம் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தென்காசி நாடாளுமன்ற தொகுதியை பொறுத்த வரை வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நாள் முதல் இதுவரை யாரும் மனு தாக்கல் செய்யப்படாத நிலையில் நேற்று முதல் வேட்பு மனுவாக பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சியான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னதாக தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு பாரதிய ஜனதா, பாமக, அமுமுக உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட கூட்டணி கட்சி தொண்டர் களுடன் மேளதாளம் முழங்க ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தனர்.

தொடர்ந்து பாஜக கொடி கட்டிய அவரது காரில் வந்த ஜான் பாண்டியன் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கமல் கிஷோரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

டேக்ஸ் :