சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள்-நடவடிக்கை எடுக்குமா?

63பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் தற்போது தற்காலிக மார்க்கெட் அமைந்துள்ளதால் அப்பகுதியில் ஏராளமான மாடுகள் சாலைகளில் விபத்தை ஏற்படுத்தும் வண்ணம் அங்கும் இங்கும் சுற்றி திரிகிறது.
மேலும் சமீபத்தில் நெல்லையில் இருசக்கர வாகனத்தில் சென்றவரை மாடு முட்டிய நிலையில் தொடர்ந்து அவர் சாலையில் நிலைத்தடுமாறி விழுந்த நிலையில் அந்த வழியாகச் சென்ற பேருந்து அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் தற்போது சங்கரன்கோவில் பகுதிகளில் சாலையில் விபத்து நடக்கும் முன்னரே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை நகராட்சி அதிகாரிகள் மாட்டின் உரிமையாளர்களை எச்சரித்து சாலைகளில் சுற்றி தெரியாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டனர்.