குடும்பத்தோடு தற்கொலை முயற்சி - சிறுமி பலி

73பார்த்தது
குடும்பத்தோடு தற்கொலை முயற்சி - சிறுமி பலி
திருப்பூர் பல்லடத்தைச் சேர்ந்த ராஜீவுக்கு சமூக வலைதளம் மூலம் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் ரூ.2 லட்சம் கடன் வாங்கித் தருவதாகவும் அதற்கு முன்பணமாக ரூ.40,000 கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். அந்த பணத்தை ராஜீவ் கொடுத்துள்ளார். ஆனால், சொன்னபடி கடன் வாங்கித் தராமல் ஏமாற்றிவிட்டார். இதனால், ரூ.40,000 கடன் கொடுத்த நண்பர்கள் பணத்தை திருப்பிக் கேட்டதால் மனமுடைந்த ராஜீவ் தனது மனைவி விஜி, மகளுடன் தற்கொலைக்கு முயன்றார். இதில், ராஜீவ் மற்றும் அவரது மனைவி உயிர் தப்பிய நிலையில் 6 வயது மகள் வின்சிலின் உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி