கார்த்திக் குமார் குறித்து பேச சுசித்ராவிற்கு தடை

51பார்த்தது
கார்த்திக் குமார் குறித்து பேச சுசித்ராவிற்கு தடை
சமீபத்தில் சுசித்ரா தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் குறித்து சர்ச்சைக்குறிய கருத்துக்களை பேசியிருந்தார். இதனால், தன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக கூறி சுசித்ரா மீது கார்த்திக் குமார் ஒரு கோடி மான நஷ்ட ஈடு வழங்க உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் தற்போது கார்த்திக் குமார் குறித்து கருத்து தெரிவிக்க சுசித்ராவிற்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.