இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

76பார்த்தது
இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறையில் இருந்து ராமன் மற்றும் பொன்னுதுரை என்பவர்களுக்கு சொந்தமான 2 படகுகளில் 5 மீனவரக்ள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மின்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் மீனவர்களின் படகுகளில் இருந்த மீன், நண்டு, ஜிபிஎஸ் கருவி, செல்போன்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கடலோர காவல் குழுமத்திடம் மீனவர்கள் புகார் அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி