கேள்வி கேட்ட பாஜக பிரமுகருக்கு மண்டை உடைப்பு

71பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள புதுவயல் பேரூராட்சியில் வழக்கம்போல் நடக்கும் மாதாந்திர கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது கூட்டத்திற்கு இடையில் பாஜகவை சேர்ந்த உறுப்பினர் செல்வா கூட்டத்தில் நடைபெற்ற விவாதத்தில் மக்கள் பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பி விவாதித்ததாக தெரிகிறது. அப்போது திமுக துணைத் தலைவருக்கும் பாஜக கவுன்சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் கூட்டத்திற்கு வெளியே வந்த பின் பேரூராட்சி துணைத் தலைவர் அலி மற்றும் பாஜக பிரமுகர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியாக மாறியது. இதில் பாஜக பிரமுகர் பிரகாஷ் என்பவருக்கு தலை மற்றும் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டு காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பிஜேபி கட்சியைச் சேர்ந்த பேரூராட்சி உறுப்பினர் செல்வ என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. அதன் பின்பு தாக்கிய நபரை கைது செய்யக் கூறி புதுவயலில் பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி உறுதியளித்ததின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இருதரப்பினரும் தற்போது காவல் நிலையத்தில் முற்றுகையிட்டுள்ளதால் பரபரப்பு நிலவு வருகிறது.

டேக்ஸ் :