நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் சதம் அடித்து அசத்தியுள்ளார். கோலியின் சதம் அடித்த சாதனையை தொடர்ந்து ஸ்ரேயாஸ் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். பவுண்டரிகள் சிக்ஸர்களுடன் சரமாரியாக விளையாடி ஷ்ரேயாஸ் இன்றைய போட்டியில் ரன்களை குவித்து ரசிகர்களை பெரிதும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார். இதன் மூலம் அவர் ஒருநாள் போட்டிகளில் 5வது சதத்தை பதிவு செய்துள்ளார்.