செந்தில் பாலாஜி ஜாமீன் மனு.. நாளை தீர்ப்பு

101429பார்த்தது
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு.. நாளை தீர்ப்பு
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் நாளை காலை சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நாளை காலை 10:30 மணிக்கு தீர்ப்பு வழங்கவுள்ளார். சட்டவிரோத பணபரிமாற்றம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு பல மாதங்களாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார். ஜாமீன் கோரி பல முறை மனுதாக்கல் செய்திருந்த நிலையில், மனுவை நீதிமன்றம் நிராகரித்திருந்தது. இந்நிலையில் நாளை வழங்கப்படும் தீர்ப்பில் அவருக்கு ஜாமீன் வழங்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி