இந்தியா கூட்டணி மாணவர் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

84பார்த்தது
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதனுக்கு பணி நீடிப்பு வழங்கிய ஆளுநர் ஆர். என். ரவியை கண்டித்து இந்தியா கூட்டணி மாணவர் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக ஜெகநாதன் பணியில் இருந்த போது பல்வேறு ஊழல் முறைகேடு புகார்கள் எழுந்தது அதனைத் தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரி பழனிச்சாமி தலைமையில் தமிழக அரசு விசாரணை குழு அமைக்கப்பட்டு துணைவேந்தர் ஜெகநாதன் முன்னாள் பதிவாளர் தங்கவேல் ஆகியோர் மீது ஊழல் ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியது.

இந்நிலையில் ஜெகநாதனின் பதவிக்காலம் கடந்த ஜூன் 30ம் தேதி முடிவுற்ற நிலையில் முன்னதாக தமிழக ஆளுநர் ஆர். என். ரவி துணைவேந்தர் ஜெகநாதனுக்கு மேலும் ஒராண்டு பணி நீடிப்பு வழங்கி ஆணை வழங்கினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலை ஆசிரியர் சங்கம் மற்றும் தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக இந்தியா கூட்டணியைச் சேர்ந்த மாணவர் அமைப்புகள் ஒன்று கூடி ஊழல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்ட துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் அவருக்கு பணி நீட்டிப்புட வழங்கிய தமிழ்நாடு ஆளுநர் ரவியை கண்டித்தும், தமிழக முதல்வரை வேந்தராக நியமிக்க வேண்டியும், தற்போதைய துணைவேந்தர் ஜெகநாதனை பணி நீக்கம் செய்ய வேண்டியும் கண்டன கோஷமிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Job Suitcase

Jobs near you