சேலத்தில் கையூட்டு கேட்ட வருவாய் ஆய்வாளர் சஸ்பென்ட் - வீடியோ

79பார்த்தது
ஆத்தூரில் ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் பணிபுரியும் வருவாய் ஆய்வாளர் கையூட்டு கேட்டதால் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் வளாகப் பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதில் ஆதி திராவிடர் நல அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக கனிமொழி என்பவர் பணியாற்றி வருகிறார்.

ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல், பெத்தநாயக்கன் பாளையம்,உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆதிதிராவிடர் நல அலுவலக வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வரும் கனிமொழி தனது அலுவலகத்தில் ஒருவரிடம் கையூட்டு கேட்கும் காணொளி சமூக வலைதளங்களில் பரவி வந்தது.

அதில் தாசில்தாருக்கு ஒரு தொகை கொடுக்க வேண்டும், மற்றவர்களை பார்க்க வேண்டும் உள்ளிட்ட காட்சி பதிவாகி இருந்தது. இந்நிலையில் ஆதிதிராவிடர் நல அலுவலக வருவாய் ஆய்வாளர் கனிமொழியை பணியிடை நீக்கம் செய்துசேலம் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி