நாட்டில் இரு சக்கர வாகனங்கள் தொடர்பான சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு இரு சக்கர வாகனங்களுக்கு தனிப் பாதை அமைக்கும் திட்டத்தை சாலைப் போக்குவரத்து அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. நகரங்களில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகளுக்கு சிறப்பு பாதைகள், சுரங்கப்பாதைகள் மற்றும் மேல் பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசின் புள்ளிவிவரங்களின்படி, சாலை விபத்துகள் மற்றும் இறப்புகளில் 44% இரு சக்கர வாகனங்கள் தொடர்பானவை என்று கூறப்பட்டுள்ளது.