வாகன விபத்தில் ஓய்வு பெற்ற போலீஸ்காரர் சாவு

60பார்த்தது
வாகன விபத்தில் ஓய்வு பெற்ற போலீஸ்காரர் சாவு
வேலூர்: காட்பாடி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ஜெகதீசன். ஓய்வு பெற்ற தலைமை காவலர். இவர் அந்த பகுதியில் குடிநீர் பிடிப்பதற்காக நேற்று (மே 30) மொபட்டில் சென்று கொண்டிருந்தார். காட்பாடி கேஆர்எஸ் நகர் அருகே சென்ற பொழுது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் திடீரென மொபட் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஜெகதீசன் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெகதீசன் மகன் விஜயகுமார் விரிஞ்சிபுரம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி