தாய்ப்பால் விற்பனை செய்த மருந்து கடைக்கு பூட்டு

564பார்த்தது
திருவள்ளூர்: மாதவரத்தில் சட்ட விரோதமாக பாட்டில்களில் தாய்ப்பால் விற்றதாக முத்தையா என்பவரின் கடைக்கு சீல் வைத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 50 மில்லி பாட்டில் ரூ.500-க்கு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. முத்தையா என்பவர் நடத்தி வந்த லைவ் வேக்சின் ஸ்டோர் என்ற கடையில் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு கடைக்கு சீல் வைத்துள்ளனர்.

தாய்ப்பாலை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற புகாரின் பேரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு அங்கிருந்து 50 பாட்டில்களில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த தாய்ப்பாலை பறிமுதல் செய்தனர். எதன் அடிப்படையில் மருந்து பொருட்களை மொத்தமாக விற்பனை செய்யும் இந்த கடையில் தாய்ப்பாலை விற்பனை செய்ய முத்தையா அனுமதி பெற்றார் என்று உணவு பொருள் பாதுகாப்பு குழுவினர் விசாரித்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி