மழையில் நாசமான தார் சாலை: மாணவர்கள் பொதுமக்கள் கடும் அவதி

64பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 'தளிர் மருந்தூர்' பஞ்சாயத்தை சேர்ந்த 'அமரன் வயல்' கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்திற்கு திருவாடானை மற்றும் தொண்டியிலிருந்து இருந்து செல்லும் சாலை பலத்த சேதம் அடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்த சாலை தற்போது கற்கள் பெயர்ந்து சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால், அவசர காலத்தில் ஆட்டோ கூட வர மறுப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், மாணவ மாணவிகள் பள்ளிக்குச் செல்ல இயலாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


மேலும், இந்த கிராமத்திற்கு குடிதண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளதாக புகார் கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை சரி செய்யப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

டேக்ஸ் :