ராமர் கோயில் வழக்கு.. நீதிபதிகளுக்கு அழைப்பு!

72பார்த்தது
ராமர் கோயில் வழக்கு.. நீதிபதிகளுக்கு அழைப்பு!
வரும் ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிசேக விழாவானது நடைபெற உள்ளது. இந்நிலையில் 2019-ல் அயோத்தி ராமஜென்ம பூமி - பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், போப்டே, தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன் மற்றும் அப்துல் நசீர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி