பகலில் பஞ்சாயத்து தலைவர், இரவில் பிணம் எரிப்பவர்!

58பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா மாத்தூர் மாதாகோயில் தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 54). மாத்தூர் பஞ்சாயத்து தலைவராக பதவி வகிக்கிறார். இவருக்கு திருமணமாகி சுந்தரவல்லி என்ற மனைவியும், மூன்று பெண் குழந்தைகளும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக பஞ்சாயத்து தலைவர் பதவி வகித்தாலும், தனது தொழிலான பிணம் எரிக்கும் தொழிலை விடாமல் மேற்கொண்டு வருகிறார்.
3ம்வகுப்பு மட்டுமே படித்த அருணாச்சலம், சிறுவயதில் வீட்டின் அருகில் இருந்த தொழிற்சாலைகளில் வேலைக்கு சென்று இருக்கிறார்.
அந்த காலகட்டத்திலேயே உறவினர் மகளை திருமணம் செய்திருக்கிறார். தொழிற்சாலை வருமானம் பத்தவில்லை என்பதற்காக அப்போது இந்த ஊரில் பிணம் எரிப்பவராக இருந்த அந்தோணி என்பவர் அருணாச்சலத்தை அழைத்து தன் தொழில் தெரியாதவனுக்கு தலையளவு பஞ்சம் என்பதை தெரிந்து கொள் என்று கூறியிருக்கிறார். அவர் கூறியதை யோசித்த அருணாச்சலம், தனது தந்தை இத்தொழிலை செய்யாவிட்டாலும், தாத்தா பாலமுத்து செய்த பறையடிக்கும் வேலையையும், பிணம் எரிக்கும் தொழிலையும் துவங்கியிருக்கிறார்.
அன்றிலிருந்து தற்போது வரை, பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்தாலும் பிணம் எரிக்கும் தொழிலை கைவிடாமல் தொடர்கிறார். பஞ்சாயத்து தலைவர் என்ற ஒரு பந்தா இல்லாமல், ஊர்மக்கள் சொல்லும் வேலைகள் எதுவாக இருந்தாலும் அதை சிரமேற்கொண்டு செய்து முடிக்கிறார்.

தொடர்புடைய செய்தி