புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே குரும்பப்பட்டியை சேர்ந்தவர் சண்முகம் மனைவி சிந்தியா (27). 2 நாட்களுக்கு முன்பு விசலிகோயில் திருவிழாவுக்கு சென்று விட்டு கீராருக்கு அரசு டவுன் பஸ்சில் வந்தார். கூட்ட நெரிசலை பயன்படுத்தி துணிப்பைக்குள் வைத்திருந்த மூன்றரை பவுன் தங்க செயின், ஒரு செல்போன் ஆகியவற்றை மர்மநபர் திருடி சென்றார். இதுபற்றி சிந்தியா அளித்த புகாரின்பேரில், கீரனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.