பள்ளி மாணவி மாயம்: காவலர்கள் தீவிர விசாரணை!

74பார்த்தது
ஆலங்குடி அருகேயுள்ள மேலப்பட்டி ராசியமங்கலத்தைச் சேர்ந்தவர் சின்னத்துரை. இவரது மகள் துர்கா (15). இவர், ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 7ம் தேதி வீட்டிலிருந்த துர்கா மாயமானார். இது குறித்து, நேற்று முன்தினம் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.