புதுச்சேரி - Puducherry

உழவர்கரையில் ரூ.37 லட்சத்தில் வாய்க்கால் தடுப்பு சுவர் பணி

உழவர்கரை தொகுதி மேட்டு வாய்க்கால் வலது கரையில் மேட்டுப்பாளையம் சாலை முதல் பிராமணர் வீதி அருகே உள்ள முனீஸ்வரன் கோயில் வரை பழுதடைந்துள்ள தடுப்பு சுவரை அகற்றி 37 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தடுப்பு சுவர் அமைக்க மறுக்கட்டுமான பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர் கலந்து கொண்டு பணிகளை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நீர்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் லூயி பிரகாசம், இளநிலை பொறியாளர் கணேஷ், ஒப்பந்ததாரர் பாவாடை, ஊர் முக்கிய பிரமுகர்கள் முருகையன், ஸ்ரீநிவாசன், குரு பழனி, கமலநாதன், ஆடிட்டர் மணி, மஞ்சுநாதன், வேலு, முரளிதரன், ஜனார்த்தனன் மற்றும் எம். எல். ஏவின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

வீடியோஸ்


புதுச்சேரி