ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக அறிவிப்புகள் வெளியீடு

60பார்த்தது
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக அறிவிப்புகள் வெளியீடு
சட்டசபையில் இன்று நடந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானிய கோரிக்கையில் 19 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. “தொல்குடி புத்தாய்வு திட்டத்துக்கு ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கீடு. வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழங்குடியினர் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் முதலிபாளையம், ஈரோடு ஈங்கூர் தாட்கோ தொழிற்பேட்டைகள் ரூ.50 கோடியில் புனரமைப்பு” உள்ளிட்ட 19 புதிய அறிவிப்புகளை அமைச்சர் கயல்விழி வெளியிட்டார்.