வழக்கறிஞர் சங்கத்தினர் இன்று நீதிமன்ற பணி புறக்கணிப்பு

82பார்த்தது
வழக்கறிஞர் சங்கத்தினர் இன்று நீதிமன்ற பணி புறக்கணிப்பு
பெரம்பலூர் வழக்கறிஞர் சங்கத்தின் நிர்வாக குழுவில் அவசர குழு கூட்டம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் தலைவர் வள்ளுவன் நம்பி தலைமையில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்றது, இதில் செந்துறை வழக்கறிஞர் ராஜா பிரபாகரன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டது குறித்து செந்துறை வழக்கறிஞர்கள் சங்கம் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சிந்தனை வழக்கறிஞர் சங்கத்தினர் , பெரம்பலூர் வழக்கறிஞர் சங்கத்தின் ஆதரவு கோரி வேண்டுகோள் விடுத்ததை ஏற்று சங்க உறுப்பினர்கள் ஏப்ரல் 24ஆம் தேதி புதன்கிழமை ஒரு நாள் மட்டும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற பணிகளில் இருந்து விலகி இருப்பது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது, அதனை தொடர்ந்து ஏப்ரல் 24 ஆம் தேதி இன்று காலை பத்து மணி முதல் பெரம்பலூர் வழக்கறிஞர் சங்கத்தினர் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர், இதனால் நீதிமன்ற பணிகள் சற்று பாதிக்கப்பட்டுள்ளன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி