அட்வகேட் அசோசியேஷன் சார்பில் ஆர்ப்பாட்டம்

65பார்த்தது
முப்பெரும் சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட அட்வகேட் அசோசியேஷன் சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட அட்வகேட் அசோசியேஷன் சார்பில் மத்திய அரசு முப்பெரும் சட்டங்களில் திருத்தம் செய்யப்படவுள்ளதை திரும்ப பெற வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் தொடர்ச்சியாக நீதிமன்ற பணி புறக்கணிப்பிலும் வழக்கறிஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று இதே கோரிக்கையை வலியுறுத்தி பெரம்பலூர் தலைமை தபால் நிலையம் முன்பு, பெரம்பலூர் மாவட்ட அட்வகேட் அசோசியேசன் சார்பில் அதன் மாவட்ட தலைவர் செந்தாமரைக்கண்ணன் தலைமையில் வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ள வழக்கறிஞர்கள் மத்திய அரசு உடனடியாக இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.