பதஞ்சலி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய ராம்தேவ்

64பார்த்தது
பதஞ்சலி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய ராம்தேவ்
யோகா குரு ராம்தேவ் மற்றும் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோர் மீது அவமதிப்பு வழக்கு ஏன் தொடரக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இருவரும் ஆஜராகினர். மார்ச் 19 அன்று, நிறுவனத்தின் தயாரிப்புகளின் விளம்பரங்கள் மற்றும் அவற்றின் மருத்துவ திறன் தொடர்பான வழக்கில் வெளியிடப்பட்ட நோட்டீஸுக்கு நிறுவனம் பதிலளிக்காததற்கு எதிராக, ராம்தேவ் மற்றும் பால்கிருஷ்ணா ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இன்று விசாரணைக்கு ஆஜரான நிலையில், மருத்துவம் தொடர்பாக தவறான தகவல்களை விளம்பரம் செய்ததற்காக ராம்தேவ் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

தொடர்புடைய செய்தி