இருவருக்கு சிறை தண்டனை விதித்ததுகுன்னூர் நடுவர் நீதிமன்றம்

65பார்த்தது
குன்னூரில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய திமுக பிரமுகர் உட்பட இருவருக்கு சிறை தண்டனை விதித்து குன்னூர் நடுவர் நீதி மன்றம் நீதிபதி தீர்ப்பு.

குன்னூர் கிருஷ்ணபுரத்தை சேர்ந்த திமுக வார்டு கிளை செயலாளர் ரஹிம் என்கின்ற (அப்துல் ரஹிம்) இவர் குன்னூர் வியாபாரிகள் சங்கத்தின் செயலாளராகவும் உள்ளார். மற்றொருவர் குன்னூர் அருகே உள்ள அதிகரட்டி பகுதியை சேர்ந்த ஜோகி ஆகிய இருவரும் சேர்ந்து கடந்த 2013 ல், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி குன்னூரை சேர்ந்த அனிதா, சந்தோஷ்குமார், சதிஷ்குமார், மஞ்சுநாதன் ஆகியோரிடம் 14 லட்சம் ரூபாய் பணம்
பெற்றிருந்தனர்.
வேலை கிடைக்காமல் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர்கள் பணத்தை திருப்பி தர கேட்டும் தரவில்லை இவர்கள் இருவர் மீது குன்னூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குன்னூர் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல்சலாம் இதற்கான தீர்ப்பை வழங்கப்பட்டது அதில் வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை ஏமாற்றிய ரஹிம், மற்றும் ஜோகி இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதுடன் பணம் வாங்கியவர்களுக்கு மொத்தம் 26 லட்சத்து 36 ஆயிரம் ரூபாயை 3 மாதத்திற்குள் கொடுக்க வேண்டும் என குன்னுார் நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டனர்.

டேக்ஸ் :