திருச்செங்கோடு நகராட்சியில் சாலை அமைக்கும் பணி

62பார்த்தது
திருச்செங்கோடு நகராட்சியில் சாலை அமைக்கும் பணி
திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட சூரியம்பாளையம் to மாங்குட்டைப்பாளையம் செல்லும் பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மண்சாலையினை தார் சாலையாக அமைக்கும் பணிக்கு திமுக நாமக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ். எம். மதுரா செந்தில் தலைமையில் பூமி பூஜை போடப்பட்டது.

இப்பூஜையில் நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு, நகராட்சி ஆணையாளர் சேகர் மற்றும் நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன், நகர் மன்ற உறுப்பினர்கள் ரமேஷ், SP. ரவிக்குமார், WT. ராஜா, செல்வி ராஜவேல், தாமரைச் செல்வி மணிகண்டன், சினேகா ஹரிகரன், திவ்யா வெங்கடேஸ்வரன், சண்முகவடிவு, செல்லம்மாள் தேவராஜன், சுரேஷ்குமார் முருகேசன், மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்