நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் புதியதாக கட்டப்பட்ட தினசரி சந்தை மற்றும் வணிக வளாகத்தை மாவட்ட ஆட்சியர் உமா அவர்களின் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில், நகரமன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன், ஒன்றிய கழக செயலாளர் வட்டூர் தங்கவேல், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ் பாபு, 11 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் மனோன்மணி சரவணமுருகன் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள், கழக, சார்பு அணி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.