நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு

62பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருநாவலூரில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளை பார்வையிட்டு நெல்லின் ஈரப்பதம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் நிதியாண்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் தமிழ்நாட்டில் 15, 500 கோடி ரூபாய் கடன் வழங்க நடவடிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி