ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு 108 திருவிளக்கு பூஜை

77பார்த்தது
ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு 108 திருவிளக்கு பூஜை
. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூரில் பழமை வாய்ந்த ஸ்ரீசீதளாதேவி மாரியம்மன் ஆலயம் உள்ளது. பிரசித்தி பெற்ற இவ்வாலயத்தில் இன்று ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது திருவிளக்கு பூஜையை முன்னிட்டு சீதளாதேவி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது தொடர்ந்து கோயில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது பெண்கள் திருவிளக்கு ஏற்றி, சந்தனம் குங்குமம் இட்டு மலர்களால் அர்ச்சனை செய்து குத்து விளக்கிற்கு தீபாரதனை செய்து சிறப்பு வழிபாடு செய்தனர் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்

தொடர்புடைய செய்தி