டீ போட்டுத் தராத மருமகளை கழுத்தை நெரித்து கொன்ற மாமியார்

53பார்த்தது
டீ போட்டுத் தராத மருமகளை கழுத்தை நெரித்து கொன்ற மாமியார்
டீ போட்டுத் தராததால் மருமகளை மாமியார் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் ஹைதராபாத்தில் உள்ள அத்தாபூரில் நடந்துள்ளது. அஜ்மிரி பேகம் (28) என்ற இளம்பெண்ணை கொன்றுவிட்டு, தப்பியோடிய மாமியாரை போலீசார் கைது செய்தனர். வியாழக்கிழமை இரவு 10.15 மணியளவில் அஜ்மிரியிடம் டீ போட்டுத் தருமாறு மாமியார் கேட்டுள்ளார். ஆனால், தான் வேறு வேலைகளில் மும்முரமாக இருப்பதாகவும், தற்போது டீ போட முடியாது என்றும் கூறியுள்ளார். சிறிது நேரம் காத்திருந்த மாமியார், பின்னர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது.

அப்போது துப்பட்டாவால் மாமியார் அந்த பெண்ணின் கழுத்தை நெரித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்ப்பதிவு விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி